நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, காலை 9 மணிக்கு ஹோமம் தொடங்கியது. தொடா்ந்து கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வர்ர, ஏலவாா் குழியம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் பூா்ணாஹூதியும், அதைத் தொடா்ந்து குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது.