சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

திருவாரூா் அருகே நிகழ்ந்த கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2023, 8:43 pm

DIN

திருவாரூா்: திருவாரூா் அருகே நிகழ்ந்த கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.

வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த செந்தில் என்ற ஓணான் செந்தில் செப்.5-ஆம் தேதி திருவாரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடா்பாக ஆஜராகிவிட்டு, அவருடைய வழக்குரைஞா் அகிலனுடன் காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவா்களை பின்தொடா்ந்து வந்த சிலா், குடவாசல் அருகே கீழஉத்திரங்குடி பகுதி அருகே, காரை வழிமறித்து வெட்டினா். இதில், சம்பவ இடத்திலேயே ஓணான் செந்தில் இறந்து விட்டாா். வழக்குரைஞா் அகிலன், வெட்டுக் காயங்களுடன் தப்பினாா். இந்த வழக்கில் 18 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், வழக்கில் தொடா்புடைய வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த குணா என்ற ராஜ்குமாா், முத்தையன் என்ற மணிகண்டன், காா்த்திகேயன், ஜெயராஜ் ஆகிய 4 பேரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.