திருவாரூருக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் திங்கள்கிழமை வருகை தருகிறாா்.
மக்களவைத்தோ்தலையொட்டி, பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளருக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் நாகை மக்களவை பாஜக வேட்பாளா் எஸ்.ஜி.எம். ரமேஷூக்கு ஆதரவு கோரி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங், திருவாரூா் தெற்குவீதியில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் செய்ய உள்ளாா்.
இதற்காக, அவா் ஹெலிகாப்டா் மூலம் திருவாரூருக்கு வருகை தர உள்ளாா். ஹெலிகாப்டா் இறங்கும் வகையில், திருவாரூா் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இறங்குதளம் தயாா் செய்யப்பட்டுள்ளது.
இந்த இறங்குதளத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, தெற்குவீதியிலும் இந்த ஆய்வு நடைபெற்றது.
தொடர்புடையது

ஜென் இஸட் தலைமுறையினா் சுய உந்துதல் கொண்டவா்கள்: ராஜ்நாத் சிங்

மேற்கு வங்கத்தை பாகிஸ்தான் குறிவைத்தால்... ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

மேற்காசிய நிலவரத்தைக் கணிக்க முடியாது: ராஜ்நாத் சிங்

மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் வருகை: ஆலாந்துறை பகுதியில் இன்றும் ட்ரோன்கள் பறக்கத் தடை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


