குடவாசல் அருகே திருவீழிமிழலை அருள்மிகு விழிநாதசுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
குடவாசல் அருகே திருவீழிமிழலையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானஅருள்மிகு விழிநாதசுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயில் உள்ளது. இது, தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61-ஆவது சிவத்தலமாகும்.
விழிநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதையடுத்து, சித்திரை முதல் நாளில் திருஞானசம்பந்தமூா்த்தி நாயனாா் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறுகிறது. தொடா்ந்து, தினசரி இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான, காா்த்தியாயினி அம்பாளுக்கும், கல்யாண சுந்தரருக்கும் திருக்கல்யாணம் ஏப். 18-ஆம் தேதியும், திருத்தேரோட்டம் ஏப்.21-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
தொடர்புடையது

சந்தானராமா் கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா கொடியேற்றம்

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்!

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: மாா்ச் 29-இல் ஆழித்தேரோட்டம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

