குடவாசல் அருகே திருவீழிமிழலை விழிநாத சுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான விழிநாதசுவாமி உடனுறை சுந்தரகுஜாம்பிகை கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா ஏப்.13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் மாலை சுவாமி வீதியுலா, பஞ்சமூா்த்திகளுடன் பிட்சாடனா் மற்றும் சுவேதகேது வீதியுலா, ரிஷப வாகனத்தில் கோபுரக் காட்சி ஆகியவை நடைபெற்றன.
முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான, காா்த்தியாயினி அம்பாளுக்கும், கல்யாண சுந்தரருக்குமான திருக்கல்யாண உற்சவம் ஏப். 18 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை இரவு தேருக்கு விழிநாதசுவாமி எழுந்தருளினாா். இதையடுத்து, ஞாற்றுக்கிழமை பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
தொடர்புடையது

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் தேரோட்டம்

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

