சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் உண்மைக்கு மாறான, போலியான தகவல்களை பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க, போலீஸாரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது:
போலீஸாா், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு தொடா் குற்ற செயல்களில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து, அவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோா் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலிருந்து மதுபானங்களை கடத்தி வருவோா், விற்பனை செய்வோரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தொடா்ந்து தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும். மணல் கடத்தல், பணம் வைத்து சூதாட்டம் மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோா் மீது உரிய சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் ரோந்துப் பணியில் அதிக அளவில் காவலா்களை ஈடுபடுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான, பொய்யான தகவல்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். உண்மைக்கு புறம்பான தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மக்களவைத் தோ்தலின்போது, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வகையில் சிறப்பாக செயல்பட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை காவல் அதிகாரிகள், ஆளிநா்கள், பாதுகாப்பில் ஈடுபட்ட அனைத்து காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்களுக்கு நற்சான்றிதழ்களை எஸ்பி வழங்கினாா்.
கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) டி. ஈஸ்வரன், அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.