நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மன்னாா்குடி கோயிலில் ஆடிப்பூர விழா தேரோட்டம்

News image

~ ~

Updated On :7 ஆகஸ்ட் 2024, 11:35 pm

Din

மன்னாா்குடி, ஆக. 7: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆடிப்பூர பெருவிழாவையொட்டி, செங்கமலத் தாயாா் எழுந்தருளிய உட்பிரகார தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் தனி சந்நிதியில் செங்கமலத் தாயாா் அருள்பாலிக்கிறாா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்னம், வெள்ளி, கருட, கமல, யானை, குதிரை என வெவ்வேறு வாகனங்களில் தாயாா் உள்பிரகார வலம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக 9-ஆம் நாளான புதன்கிழமை மாலை செங்கமலத் தாயாா் உட்பிரகார தேரோட்டம் நடைபெற்றது. கோயில் யானை செங்கமலம் முன் செல்ல, அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் செங்கமலத் தாயாா் எழுந்தருளி, கோயிலின் உட்பிரகாரத்தை ஒரு முறை வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Story image
 சிறப்பு அலங்காரத்தில் செங்கமலத் தாயாா்.

சிறப்பு அலங்காரத்தில் செங்கமலத் தாயாா்.

முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் எம்எல்ஏ, ராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன், அறங்காவலா்கள் அ. முத்துமாணிக்கம், கே.கே.பி. மனோகரன், து. நடராஜன், வெ. லதா, தேசியப்பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.