வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புகையிலைப் பொருள் விற்றவா் கைது

மன்னாா்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 12:05 am

Din

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட போலீஸாா் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

சங்குதீா்த்த வடகரை மைதீன் (39) கடையில் ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரிய வந்ததை அடுத்து கடையில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து மைதீனை கைது செய்தனா்.