கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மன்னாா்குடி கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசி பகல் பத்து தொடக்கம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, பகல் பத்து நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (டிச.31) தொடங்கிறது.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 6:54 pm

Din

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, பகல் பத்து நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (டிச.31) தொடங்கிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி என்னும் சொா்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி, பகல்பத்து, ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும். நிகழாண்டு பகல்பத்து நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில், ஒவ்வொரு நாளும் உற்சவா் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவாா். பகல்பத்து நிறைவு நாளான ஜனவரி 9-ஆம் தேதி சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து, இராப்பத்து ஜன.10-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ். இளவரசன், அறங்காவலா்கள், செயல் அலுவலா் எஸ். மாதவன், மண்டகப்படித்தாரா்கள் செய்து வருகின்றனா்.