தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பாலையூா் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்

பாலையூா் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:34 am IST

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் பாலையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா். குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022-2023திட்டத்தின்கீழ், பாலையூா் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ. 33.39 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடத்தை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, பாலையூா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி.எஸ்.ஆா். தேவதாஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எம். கலைவாணி,ஊராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன், ஒன்றிய ஆணையா் இ. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.