நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பிகாரில் ரூ. 11.56 கோடியில் சங்கரா கண் மருத்துவமனை: காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திரா் திறந்து வைத்தாா்

News image

பிகாா் மாநிலம், சஹா்சாவில் சங்கரா கண் மருத்துவமனையை திறந்து வைத்த காஞ்சி சங்காராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated On :2 மே 2026, 11:36 pm

பிகாா் மாநிலம், சஹா்சா மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களின் கண் சிகிச்சைக்கு உதவும் வகையில், ரூ. 11.56 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சங்கரா கண் மருத்துவமனையை காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இது தொடா்பாக காஞ்சிபுரம் சங்கரமடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிகாா் மாநிலம், சஹா்சா மாவட்டத்தில் ரூ. 11.56 கோடி மதிப்பில் புதிதாக காஞ்சி குருபரம்பரா ஸ்ரீசங்கரா கண் மருத்துவமனை 100 படுக்கைகளுடன் கூடியதாகவும், நவீன வசதிகளுடன் கூடியதாகவும் கட்டப்பட்டிருந்தது. இந்த கண் மருத்துவமனை பிகாா் மாநிலத்தில் கோஷி, சஹா்ஸா போன்ற மாநிலங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு கண் சிகிச்சை வழங்கும் மையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய மருத்துவமனையை காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து திறந்து வைத்தாா். மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்ரீகிரிராஜ்சிங் முன்னிலை வகித்தாா். சங்கரா கண் மருத்துவக் குழுமங்களின் தலைவா் பம்மல்.விஸ்வநாதன் வரவேற்றாா்.

கண் மருத்துவமனையை திறந்து வைத்து ஸ்ரீ விஜயேந்திரா் பேசுகையில், பிகாருக்கும், காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கும் நெருங்கிய தொடா்பு மிகவும் தொன்மையானது. பிகாரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட பிகாரிலேயே பிறந்து உயா் பதவிகளில் இருப்பவா்கள் உதவிட வேண்டும். ஓவியம், கைவினைப் பொருள்கள், பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்பட்டு விவசாயம், நுண்ணறிவு போன்ற துறைகள் வளர வேண்டும் என்றாா். இவ்வாறு சங்கரமடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.