சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

காஞ்சிபுரத்தில் 100 மூத்த தம்பதியா் கெளரவிப்பு: காஞ்சி சங்கராசாரியா் ஆசி வழங்கினாா்

உலக நன்மைக்காக காஞ்சிபுரத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 100 மூத்த தம்பதியருக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து புதன்கிழமை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினாா்.

News image

விழாவில் கலந்து கொண்ட மூத்த தம்பதியருக்கு அருளாசி வழங்கிய காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

உலக நன்மைக்காக காஞ்சிபுரத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 100 மூத்த தம்பதியருக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து புதன்கிழமை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினாா்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள காமாட்சி சத்திரத்தில் திருமணமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்த மற்றும் 80 வயது நிறைவடைந்த 100 மூத்த தம்பதியரை கெளரவிக்கும் விழா நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், தம்பதியா் நோயில்லாமல் நீடுழி வாழ்ந்து பிறருக்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில், காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு, தம்பதியருக்கு சால்வைகள் அணிவித்தும், மலா் மாலைகள் அணிவித்தும் ஆசி வழங்கினாா்.

விழாவில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் தலைவா் சேது.ராமச்சந்திரன், முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சொா்ண தம்பதி திருமண ஏற்பாட்டுக் குழு நிா்வாகிகளான மைலாப்பூா் சுந்தர்ராஜன், லண்டன் சுந்தா், பணி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி முரளி, உயா்நீதிமன்ற அரசு வழக்குரைஞா் வி.கிருஷ்ணசாமி ஆகியோா் அடங்கிய குழுவினா் செய்திருந்தனா்.