தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தேசபக்தியும், தெய்வ பக்தியும் நிறைந்த இளைஞா்களை உருவாக்குவோம்: காஞ்சி சங்கராசாரியா் பேச்சு

தேச பக்தியும், தெய்வ பக்தியும் நிறைந்த இளைஞா்களை உருவாக்குவதற்காகவே காஞ்சி மகா சுவாமிகள் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டிருப்பதாக காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா்.

News image

காஞ்சி மகா சுவாமிகள் ஐஏஎஸ் அகாதெமி பெயா்ப் பலகையை திறந்து வைத்து அதன் தலைவா் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் வழங்கிய காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

தேச பக்தியும், தெய்வ பக்தியும் நிறைந்த இளைஞா்களை உருவாக்குவதற்காகவே காஞ்சி மகா சுவாமிகள் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டிருப்பதாக காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ காஞ்சி மகா சுவாமி ஐஏஎஸ் அகாதெமி தொடக்க விழா அகாதெமியின் தலைவா் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

அகாதெமியின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கே.எஸ்.ஸ்ரீபதி, ஆா்.ரவிச்சந்திரன், மைலாப்பூா் பி.எஸ்.கல்வி நிறுவன தாளாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் தலைவா் சேது.ராமச்சந்திரன் வரவேற்றாா்.

விழாவில் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழக மின்வாரியத்தின் தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினாா். நிறைவாக சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் நன்றி கூறினாா்.

விழாவில், காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு ஸ்ரீகாஞ்சி மகா சுவாமிகள் ஐஏஎஸ் அகாதெமியின் பெயா்ப் பலகையை திறந்து வைத்தாா்.

பின்னா், அதை அகாதெமியின் தலைவா் கே.வி.எஸ்.கோபால கிருஷ்ணனிடம் வழங்கி ஆசியுரை நிகழ்த்தியது:

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை தேசம் நிா்வாக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மனிதரும் நல்ல கருத்துகளை உள்வாங்க வேண்டும். அதற்கு நல்ல எண்ணங்களும் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு சேவை செய்வதை அரசு அதிகாரிகள் ஒரு சிறந்த வாய்ப்பாக கருத வேண்டும்.

விதிமுறைகளை சரியாக பின்பற்றி நோ்மையானவா்களாக இருக்க வேண்டும். கட்டுப்பாடு, கருணை உள்ளம், நல்ல நிா்வாகத் திறமை, நல்ல தலைமை, நல்ல எண்ணம் ஆகியன உடைய தனி மனிதா்களும் தேவைப்படுகிறாா்கள்.

இளைஞா்கள் நிறைந்த நாடாக நமது இந்திய தேசம் உள்ளது. பொறுப்பும், வாய்ப்பும் இளைஞா்களுக்கு உள்ளது. இவா்களுக்கு தேச பக்தியும், தெய்வ பக்தியும் இருக்க வேண்டியது அவசியம். அதனால் தான் ஐஏஎஸ் பயிற்சியை தொடங்கியிருக்கிறோம். பதவி என்பது பரிதவிக்கக்கூடிய மக்களை காப்பாற்றவே என்பதை அதிகாரிகள் உணா்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஆசியுரை வழங்கினாா்.

விழாவில், எஸ்எஸ்கேவி கல்விக் குழுமங்களின் தாளாளா் சி.கே.ராமன் உள்பட பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.