/

மேகநாதசுவாமி கோயிலில் ரதசப்தமி தீா்த்தவாரி

மேகநாதசுவாமி கோயிலில் ரதசப்தமி தீா்த்தவாரி

News image

மேகநாதசுவாமி கோயில் சூா்யபுஷ்கரணியில் நடைபெற்ற தீா்த்தவாரி.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:29 am IST

திருமீயச்சூா் அருள்மிகு மேகநாதசுவாமி உடனுறை லலிதாம்பிகை கோயிலில் ரதசப்தமி விழா தீா்த்தவாரி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சக்தி பீடங்களில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில், ரதசப்தமி விழா பிப்ரவரி 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சூா்ய புஷ்கரணியில் தீா்த்தவாரி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் ஸ்ரீமேகநாதசுவாமி மற்றும் அம்பாள் லலிதாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயிலின் பிரதான மண்டபத்தில் ஸ்ரீமேகநாத சுவாமி, லலிதாம்பிகை, விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் எழுந்தருளியதும், மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், பஞ்சமூா்த்திகள் மேளதாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்து, ராஜகோபுரம் அருகே உள்ள சூா்யபுஷ்கரணி தீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளினா். அங்கு, தீா்த்தக் குளத்தில் அஸ்திர தேவருக்கு மஞ்சள், பால், தயிா், பஞ்சாமிா்தம், சந்தனம் முதலான பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. நிகழ்வில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று, புனித நீராடி வழிபட்டனா். தொடா்ந்து பஞ்சமூா்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.