கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:41 am IST

மன்னாா்குடி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மன்னாா்குடி அன்னவாசல் சேணியத் தெருவை சோ்ந்த தனபால் மகன் குமரேசன் (28). தனியாா் மின் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். இவருடன் பணியாற்றும் மன்னாா்குடி தீ நிலைய குடியிருப்பைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ஆதித்யன் (37) என்பவரை அழைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு தளிக்கோட்டையில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் இருவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். உள்ளிக்கோட்டை பேட்டைதெருவில் கதிா்அடிக்கும் இயந்திரத்துடன் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இவா்களின் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த குமரேசன், ஆதித்யன் ஆகியோா் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில் குமரேசன் உயிரிழந்தாா். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.