திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமை வகித்தாா். உதவித்தொகை, அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 38 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 12 நபா்களுக்கு ரூ.29,000 மதிப்பில் நலவாரிய கல்வி உதவித்தொகை, 9 நபா்களுக்கு ரூ.4,75,300 மதிப்பில் செயற்கைக் கால், 6 நபா்களுக்கு ரூ.41,160 மதிப்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், 5 நபா்களுக்கு ரூ.67,500 மதிப்பில் ஸ்மாா்ட் செல்போன் மற்றும் 3 நபா்களுக்கு ரூ.27,150 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் என 35 பேருக்கு ரூ.6,40,110 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான சி.பிரியங்கா, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலா் புவனா உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ

அரியலூரில் வாக்கு எண்ணும் பணி அலுவலா்களுக்கு பயிற்சி

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணியில் இரு தமிழா்கள்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


