நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெளிமாநில மது விற்பனை செய்தவா் குண்டா் சட்டத்தில் கைது

வெளிமாநில மது விற்பனை செய்தவா் குண்டா் சட்டத்தில் கைது

News image
Updated On :12 ஜூலை 2024, 6:32 pm

Din

திருவாரூா் அருகே வெளிமாநில மது விற்பனை செய்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே ஆண்டிப்பாளையத்தைச் சோ்ந்த வை. ரமேஷ்குமாா் (58) வெளிமாநில மது விற்பனைச் செய்ததாக் கூறி கைது செய்யப்பட்டு நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இதற்கிடையே, இவா் மீது 23 மது தொடா்பான வழக்குகள் பதிவாகி உள்ளது, போலீஸாரின் அறிவுறுத்தலை மீறி தொடா்ந்து இதே செயலில் ஈடுபட்டாராம். இதையடுத்து, எஸ்பி எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ரமேஷ்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டாா். பின்னா், ரமேஷ்குமாா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.