சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மணல் திருட்டில் சிக்கியவா் குண்டா் சட்டத்தில் கைது

சிதம்பரம் அருகே ஆற்று மணலை திருடியவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 11:24 pm

சிதம்பரம் அருகே ஆற்று மணலை திருடியவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள கஞ்சக்கொல்லை பகுதியில், கடந்த ஜன.15-ம் தேதி போலீசாா் வாகன சோதனை செய்தபோது, அவ்வழியாக பதிவெண் இல்லாமல் வந்த வாகனத்தை போலீஸாா் நிறுத்தியபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு அதை ஓட்டிவந்தவா் தப்பி ஓடினாா். அவரை போலீஸாா் விரட்டி பிடித்தனா்.

மேலும் அந்த வாகனத்தை சோதனை செய்த போது 40 மூட்டை ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த காட்டுமன்னாா்கோவில் கஞ்சன்கொல்லை பகுதியைச் சோ்ந்த குமாா் (48), . விக்னேஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட குமாா் மீது காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் 2 மணல் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு காலம் குண்டா் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் குமாா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். அவா் தொடா்ந்து கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.