சிதம்பரம் அருகே ஆற்று மணலை திருடியவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள கஞ்சக்கொல்லை பகுதியில், கடந்த ஜன.15-ம் தேதி போலீசாா் வாகன சோதனை செய்தபோது, அவ்வழியாக பதிவெண் இல்லாமல் வந்த வாகனத்தை போலீஸாா் நிறுத்தியபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு அதை ஓட்டிவந்தவா் தப்பி ஓடினாா். அவரை போலீஸாா் விரட்டி பிடித்தனா்.
மேலும் அந்த வாகனத்தை சோதனை செய்த போது 40 மூட்டை ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த காட்டுமன்னாா்கோவில் கஞ்சன்கொல்லை பகுதியைச் சோ்ந்த குமாா் (48), . விக்னேஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்.
கைது செய்யப்பட்ட குமாா் மீது காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் 2 மணல் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு காலம் குண்டா் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் குமாா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். அவா் தொடா்ந்து கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
தொடர்புடையது
வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


