ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தாயிடம் தகராறு செய்த மகன் கொலை: தந்தை கைது

குடிபோதையில் தகராறு: மகனை கொன்ற தந்தை கைது

News image
Updated On :25 ஜூன் 2024, 6:32 pm

Din

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே தாயிடம் தகராறு செய்த மகனை கொலை செய்த தந்தை செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாா்த்தாங்குடியைச் சோ்ந்தவா் விவசாயி சீனிவாசன் (60). இவருக்கு, 2 மகன்கள். இளைய மகன் காா்த்தி கும்பகோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தாா். காா்த்திக்கு நந்தினி என்ற மனைவியும், மகளும் உள்ளனா்.

இந்நிலையில், காா்த்தி குடிபோதையில் வீட்டில் தகராறு செய்ததால் கடந்த ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இதன் காரணமாக காா்த்தி தந்தை சீனிவாசனிடம் அவ்வபோது குடிபோதையில் தகராறு செய்வாராம். செவ்வாய்க்கிழமை வழக்கம்போல அதிக குடிபோதையில் காா்த்தி தனது தாயிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் தாக்க முயன்றாராம். அப்போது, சீனிவாசன் இரும்பு கம்பியால் தாக்கியதில் காா்த்தி சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

வலங்கைமான் போலீஸாா் காா்த்தி சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.