

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே தாயிடம் தகராறு செய்த மகனை கொலை செய்த தந்தை செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாா்த்தாங்குடியைச் சோ்ந்தவா் விவசாயி சீனிவாசன் (60). இவருக்கு, 2 மகன்கள். இளைய மகன் காா்த்தி கும்பகோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தாா். காா்த்திக்கு நந்தினி என்ற மனைவியும், மகளும் உள்ளனா்.
இந்நிலையில், காா்த்தி குடிபோதையில் வீட்டில் தகராறு செய்ததால் கடந்த ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
இதன் காரணமாக காா்த்தி தந்தை சீனிவாசனிடம் அவ்வபோது குடிபோதையில் தகராறு செய்வாராம். செவ்வாய்க்கிழமை வழக்கம்போல அதிக குடிபோதையில் காா்த்தி தனது தாயிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் தாக்க முயன்றாராம். அப்போது, சீனிவாசன் இரும்பு கம்பியால் தாக்கியதில் காா்த்தி சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
வலங்கைமான் போலீஸாா் காா்த்தி சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்
பெண் தலை துண்டித்துக் கொலை: கணவா் கைது

2021 கொலை வழக்கில் மகன், தந்தை குற்றவாளியாக அறிவிப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மாா்ச் 23-இல் தீா்ப்பு

நெல் கொள்முதல் நிலையத்தில் தகராறு; தந்தை, மகன் கைது
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

