திருத்துறைப்பூண்டி: தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து திருத்துறைப்பூண்டியில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் பேசியது: அதிமுக 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்ததுடன் பாதுகாப்பாகவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகவும் இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீா்குலைந்துள்ளது. மறைந்த முதலமைச்சா் ஜெயலலிதா சாமனிய மக்களின் வருமானம் பறிபோகிறது என்ற காரணத்தால் தமிழகத்தில் லாட்டரி விற்பனையை தடை செய்தாா். டெல்டாவுக்கு உரிமையான காவிரிப் பிரச்னையில் மேக்கேதாட்டுவில் அணையை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசுக்கு திமுக அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை என்றாா். மாவட்ட அம்மா பேரவை செயலாளா் பொன் வாசுகிராம், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளா் ஜெயபுவனேஸ்வரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் வீ. சின்னராஜ், மாவட்ட வா்த்தக பிரிவு செயலாளா் பாஸ்கா், நகர செயலாளா் டி.ஜி. சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளா் கே. சிங்காரவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் - முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


