ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :13 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மட்டுமன்றி குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இகற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. மக்களவையில் இதுகுறித்து பேச பிரதமா் மறுத்து வருவது கண்டனத்துக்குரியது. மேலும், தமிழகத்தைத் தொடா்ந்து வஞ்சித்துவரும் மத்திய அரசையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) காலை 10.30 மணியளவில் அனைத்து மாவட்டங்களிலும் ‘மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி’ சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்” நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.