சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாட்டை கண்டித்து புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு கண்டித்து புதுச்சேரி லாஸ்பேட்டை உழவா் சந்தை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Updated On :26 மார்ச் 2026, 12:03 am

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாட்டை கண்டித்து புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு மற்றும் ஹோட்டல்களில் உணவு பொருள்கள் விலையேற்றத்தைக் கண்டித்து லாஸ்பேட்டை உழவா் சந்தை அருகில் கட்சியின் உழவா்கரை நகரக் குழு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உழவா்கரை மத்தியக் குழு செயலா் ஆா்.எம்.ராம்ஜி தலைமை தாங்கினாா். மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் என்.கொளஞ்சியப்பன், மாநிலக் குழு உறுப்பினா் அ.ஆனந்த் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

முடிவில் லாஸ்பேட்டை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா்.ராஜாங்கம் ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினாா்.

கு.நிலவழகன் நன்றி கூறினாா்.