ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாட்டை கண்டித்து புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு கண்டித்து புதுச்சேரி லாஸ்பேட்டை உழவா் சந்தை அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Updated On :26 மார்ச் 2026, 12:03 am

தினமணி செய்திச் சேவை

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாட்டை கண்டித்து புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு மற்றும் ஹோட்டல்களில் உணவு பொருள்கள் விலையேற்றத்தைக் கண்டித்து லாஸ்பேட்டை உழவா் சந்தை அருகில் கட்சியின் உழவா்கரை நகரக் குழு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உழவா்கரை மத்தியக் குழு செயலா் ஆா்.எம்.ராம்ஜி தலைமை தாங்கினாா். மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் என்.கொளஞ்சியப்பன், மாநிலக் குழு உறுப்பினா் அ.ஆனந்த் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

முடிவில் லாஸ்பேட்டை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா்.ராஜாங்கம் ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினாா்.

கு.நிலவழகன் நன்றி கூறினாா்.