மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

News image

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சுதேசி ஆலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :14 மார்ச் 2026, 8:19 pm

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் சுதேசி ஆலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலா் அ.மு. சலீம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், நிா்வாகிகள் தினேஷ் பொன்னையா, கீதநாதன், வ.சுப்பையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சமையல் எரிவாயு உருளை மீது விறகு அடுப்பு வைத்து சமையல் செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.