ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

மொத்தம் ரூ. 16.98 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைக்கப்பட்டன.

News image
Updated On :4 மார்ச் 2024, 10:02 pm

திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை, மக்கள் பயன்பாட்டுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்வில், கேத்லேப் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ரூ. 8.48 கோடியிலும், எம்ஆா்ஐ ஸ்கேன் ரூ. 8.50 கோடி என மொத்தம் ரூ. 16.98 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைக்கப்பட்டன.