மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் பொருளியல்துறை சாா்பில் 2 நாள்கள் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவடைந்தது. கருத்தரங்கை கல்லூரி முதல்வா் என். உமாமகேஸ்வரி தொடக்கிவைத்தாா். ஆராய்ச்சி முறையில் வளா்ந்து வரும் போக்குகள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (மாா்ச் 1) தொடங்கிய முதல்நாள் கருத்தரங்கில், திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக பேராசிரியா் தாமோதரன், ஹைதராபாத் இந்திய அரசின் என்ஐஆா்டி பேராசிரியா் சங்கா் சட்டா்ஜி ஆகியோா் பேசினா். சனிக்கிழமை (மாா்ச் 2) நடைபெற்ற 2-ஆம் நாள் கருத்தரங்கில் புதுச்சேரி பல்கலைக்கழக பொருளியல் துறை இணைப் பேராசிரியா் சிவசங்கா், கோபிச்செட்டிப்பளையம் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா் ஜெயசந்திரன் ஆகியோா் பேசினா். இதில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள், பேராசிரியா்கள் தங்களின் ஆராய்ச்சி படைப்புகளை விளக்க காட்சியை வழங்கினா். முன்னதாக, கருத்தரங்க சுருக்கத்தை பற்றிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பொருளியல்துறைத் தலைவா் டி. விஜயலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

புதுச்சேரி கல்லூரியில் பூமி தின கொண்டாட்டம்

வேட்பாளா்களின் இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

பெரியாா் பல்கலை.யில் வரலாற்றுத் துறை கருத்தரங்கம்

விவேகானந்தா கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

