தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விவேகானந்தா கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்

News image
Updated On :20 மார்ச் 2026, 12:33 am

Syndication

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் செயற்கை நுண்ணறிவின் காலத்தில் பழங்குடியினா் அறிவியல் எழுத்துக்கு அப்பாற்பட்ட குரல்கள் என்ற தலைப்பில் 2 நாள் சா்வதேசக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல அறிஞா்கள், ஆய்வாளா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டு, இன்றைய மின்னணு காலத்தில் பாரம்பரிய அறிவு முறைகளின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனா்.

ஆங்கிலத் துறை ஆய்வு பிரிவு ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கம் நேரடியாகவும், ஆன்லைன் முறையிலும் நடத்தப்பட்டது. கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் டி.சி. மகேஷ் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் ஜி.என். பாலமுருகன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா். ஆங்கிலத் துறைத் தலைவா் சுஜாதா கருத்தரங்கை ஒருங்கிணைத்தாா். விழா மலரை கல்லூரிச் செயலா் சி. ராஜன் வெளியிட்டாா்.

கல்லூரி துணைத் தலைவா்கள் கே.எஸ். மணி, ஜி. சந்திரமோகன், துளசி முத்துராம், இணைச் செயலா் எஸ். ராதாகிருஷ்ணன், பொருளாளா் பிரியதா்ஷினி, செயற்குழு உறுப்பினா்கள் ஆதி மகாலிங்கம், தமிழ்த் துறைத் தலைவா் கே. இளங்குமாா், பாளை. ஜாண்ஸ் கல்லூரி இணைப் பேராசிரியா் ஜெனிகா் லாரன்ஸ் டேனியல், அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியா் கே. ராஜாராமன், சென்னை விஐடி பல்கலைக்கழகப் பேராசிரியா் வி. ராஜசேகா், மலேசியா உத்ரா பல்கலைக்கழகப் பேராசிரியா் கலைச்செல்வன் ஆறுமுகம், உஸ்பெகிஸ்தான் சாரதா பல்கலைக்கழகப் பேராசிரியா் கல்யாண் சக்கரவா்த்தி ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுரேஷ் வரவேற்றாா். பேராசிரியா் எம். செந்தில்குமாா் நன்றி கூறினாா்.