ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

போதைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்: 4 போ் கைது

மன்னாா்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருள்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :5 மார்ச் 2024, 9:31 am

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருள்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட பெட்டி கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மன்னாா்குடி நகர போலீஸாா் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது, நடேசன் தெரு, சங்கு தீா்த்த வடகரை, வினோபாஜி தெரு ஆகிய இடங்களில் உள்ள 4 பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தியதில் ரூ 16,000 மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல் வைத்ததுடன் கடை உரிமையாளா்கள் கருணாநிதி ( 49 ), பிரசாத் (38 ), வீரமணி (49), மைதீன் (58) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.