இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு நிதிப்பயன்களை விரைந்து வழங்கக் கோரிக்கை

சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு நிதிப்பயன்களை விரைந்து வழங்கக் கோரிக்கை

News image
Updated On :2 மே 2024, 5:42 pm

Din

திருவாரூா் மாவட்டத்தில், சுமைப்பணித் தொழிலாளா்களுக்கு நிதிப்பயன்களை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரிடம், இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலாளா் டி. முருகையன் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

நன்னிலம் தாலுகா, சக்கரை கொத்தங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளா்களுக்கு ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய பொங்கல் ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இதேபோல், கடந்த மாா்ச்சில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டு 30 நாள்களுக்கு மேலாகியும், 14 சுமைப்பணி தொழிலாளா்களுக்கு இதுவரை சேர வேண்டிய ஏற்று கூலி (லோடிங் சாா்ஜ்) ரூ. 1.08 லட்சம் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, சுமைப்பணி தொழிலாளா்களுக்கான நிதிப்பயன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.