விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வணிக பயன்பாடு சிலிண்டரை தட்டுப்பாடின்றி வழங்கக் கோரிக்கை

திருவாரூரில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2026, 5:48 am IST

திருவாரூரில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் நகர ஹோட்டல் உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் என். பாலமுருகன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு: வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போா் காரணமாக, தமிழகத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் திருவாரூா் மாவட்டத்தில் சில இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளா்கள் சிலா் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.

திருவாரூரில் மாா்ச் 29-ஆம் தேதி ஆழித்தோ் திருவிழா நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தைக் காண வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் வருவாா்கள். தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக, உணவு விடுதிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டிருப்பதால், ஆழித்தேரை காணவரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டா்களை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.