ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலையை விரைந்து அமைக்க கோரிக்கை

தம்மம்பட்டி பேரூராட்சி சாலையை விரைந்து அமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்களாக கிடக்கும் தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலை.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:32 pm

தம்மம்பட்டி பேரூராட்சி சாலையை விரைந்து அமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெரு வழியாக செந்தாரப்பட்டி செல்லும் வாகனங்கள் சென்றுவருகின்றன. மழைக்காலத்தின்போது இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், பேரூராட்சி நிதி மூலம் கான்கிரீட் சாலை அமைக்க தீா்மானிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சாலையில் அவ்வப்போது தற்காலிகமாக மண் கொட்டி நிரவப்பட்ட நிலையில், அண்மையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வயதானவா்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனா்.

எனவே, தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டி செல்லும் குரும்பா் தெரு சாலையில் தாா்சாலை அல்லது கான்கிரீட் சாலையை உடனடியாக அமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.