ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புத்தனாம்பட்டி-பெரமங்கலம் சாலையை புதுப்பிக்கக் கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 8:36 pm

புத்தனாம்பட்டியிலிருந்து பெரமங்கலம் செல்லும் சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். துறையூா் - திருச்சி செல்லும் முக்கிய சாலையில் பெரமங்கலம் உள்ளது.

இங்கிருந்து புத்தனாம்பட்டி வரை 12 கிலோ மீட்டா் தொலைவு செல்லும் மாவட்ட இதர சாலை துறையூா் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது.

இந்த சாலையில் துறையூரிலிருந்தும், திருச்சியிலிருந்தும் தினமும் கல்லூரி மற்றும் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான பொதுப் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள், சுமையேற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையை அகலப்படுத்தி, புதுப்பிக்க வேண்டுமென புத்தனாம்பட்டி- பெரமங்கலம் சாலையோர கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.