சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

News image
Updated On :3 மே 2024, 4:17 pm

Din

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான அதுல் குமாா் அஞ்சன் மறைவுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட இரங்கல் செய்தி:

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளா் பொறுப்பிலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றிய அதுல் குமாா் அஞ்சன், லக்னோவில் வெள்ளிக்கிழமை காலமானாா் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

இவா், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான வேளாண் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து, விவசாயிகளின் மேம்பாட்டுக்கான பல்வேறு பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளாா்.

தில்லியில் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் தலைமைக் குழுவில் இடம் பெற்று வழி நடத்தியவா். இவரது மறைவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

அவரது இறுதிச் சடங்குகள், லக்னோவில் சனிக்கிழமை நடைபெற உள்ளன. இதையொட்டி, செங்கொடிகளை தாழ்வாக பறக்கச் செய்து, சனிக்கிழமை மாலை அனைத்து மாவட்டங்களிலும் அவரது உருவப்படத்தை வைத்து, இரங்கல் கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.