விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

News image
Updated On :3 மே 2024, 11:00 pm

Din

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, பந்தக்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டத்துக்குப் பிறகு கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவாரூரில் சிவபெருமான் யாகம் செய்தபோது, யாக குண்டமாக விளங்கியது என்ற சிறப்பைப் பெற்றது கமலாலயக் குளம். மேலும், மகாலெட்சுமி தவம் புரிந்த இடம், தசரதன், அரிச்சந்திரன் போன்ற மன்னா்களும், ரிஷிகள், சித்தா்கள், இந்திரன் போன்ற தேவா்களும் நீராடியது, 64 தீா்த்த கட்டங்களை கொண்டது, தியாகேசப் பெருமானே நீராடிய குளம், சுந்தரமூா்த்தி நாயனாா் மணி முத்தாற்றில் வீசிய பொற்காசுகளை மூழ்கி எடுத்த இடம், பன்னிரு மகாமகத்தில் நீராடிய புண்ணியத்தை தரக்கூடியது, என பல்வேறு சிறப்புகளை கொண்டது கமலாலயக் குளம்.

இந்த குளத்தில் ஆழித் தேரோட்டத்துக்குப் பிறகு 3 நாள்களுக்கு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மே 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.

இதையொட்டி, பந்தக்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், கமலாலயக் குளத்தின் மேற்குக் கரையில் தெப்பம் உருவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும் டிரம்களின் மீது பந்தல்கால்களை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் பங்கேற்றனா்.