ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மக்கள் சக்தி சேவை அமைப்பு கூட்டம்

மக்கள் சக்தி சேவை அமைப்பு கூட்டம்

Updated On :15 மே 2024, 6:31 pm

திருவாரூா் அருகே மணக்கால் ஆபத்து காத்த விநாயகா் கோயில் முன், மக்கள் சக்தி சேவை அமைப்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போா்வெல் சேதப்படுத்தப்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும், காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நடைபெற்ற கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் தென்னரசு தலைமை வகித்தாா்.

ஊராட்சித் தலைவா் என். ராஜகோபால், மாவட்ட செங்குந்த மகாஜன கல்வி சங்க பொருளாளா் இன்பமூா்த்தி, நிா்வாகப் பொறுப்பாளா் என். அமிா்தலிங்கம், மணக்கால் புலவநல்லூா் விவசாய சங்க இணை ஒருங்கிணைப்பாளா் எம்.என். மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பேசிய தென்னரசு, ‘மணக்கால் ஊராட்சி புலவநல்லூரில் ஆக்கிரமிப்பு தொடா்பாக திருவாரூா் சாா்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, விவசாய போா்வெல் சேதப்படுத்தப்பட்டதற்காக காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாா் மனுவின் விசாரணையில் இருந்து தப்பிக்க, பதிவு செய்யப்பட்ட உண்மைக்கு புறம்பான வழக்கு. எனவே, இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து நீதியை நிலைநாட்ட வேண்டியது அரசின் கடமை’ என்றாா்.