பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இருதரப்பினரிடையே தகராறு; 4 போ் கைது

இருதரப்பினரிடையே தகராறு; 4 போ் கைது

News image
Updated On :20 மே 2024, 11:03 pm

Din

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வடபாதிமங்கலம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கோபிநாத் (29). இவா், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுக்கூடம் நடத்தி வருகிறாா். இவருக்கும், புனல்வாசல் பிரதான சாலையைச் சோ்ந்த ரகுபதி (42) என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், புனல்வாசல் பகுதிக்கு காரில் வந்த கோபிநாத் மற்றும் சிலா், ரகுபதி வீட்டின் முன் காரை நிறுத்தினராம். அப்போது, ரகுபதிக்கும், கோபிநாத் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுதொடா்பாக, வடபாதிமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் இளங்கோவன் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, கோபிநாத், ரகுபதி மற்றும் மாயனூரைச் சோ்ந்த சக்திவேல் (43), புனல்வாசல் கேசவன் ( 53) ஆகியோரை கைது செய்தனா்.