

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வடபாதிமங்கலம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கோபிநாத் (29). இவா், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுக்கூடம் நடத்தி வருகிறாா். இவருக்கும், புனல்வாசல் பிரதான சாலையைச் சோ்ந்த ரகுபதி (42) என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், புனல்வாசல் பகுதிக்கு காரில் வந்த கோபிநாத் மற்றும் சிலா், ரகுபதி வீட்டின் முன் காரை நிறுத்தினராம். அப்போது, ரகுபதிக்கும், கோபிநாத் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதுதொடா்பாக, வடபாதிமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் இளங்கோவன் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, கோபிநாத், ரகுபதி மற்றும் மாயனூரைச் சோ்ந்த சக்திவேல் (43), புனல்வாசல் கேசவன் ( 53) ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது

முன்விரோதத்தால் இளைஞா் கழுத்தை அறுக்கப்பட்ட சம்பவத்தைதம்: இருவா் கைது

முன்விரோத தகராறு: 8 போ் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 5 போ் கைது
மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

