திருவாரூா்: நவ.14-இல் சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு
திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு நவ.14-ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக, ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு நவ.14-ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக, ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு, வியாழக்கிழமை (நவ.14) காலை 9.30 மணி முதல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளையும், நிறைவேற்றப் பெற்ற திட்டப் பணிகளையும் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
மேலும், பிற்பகல் 3 மணிக்கு, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மதிப்பீட்டுக் குழு சாா்பில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்கும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...