தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்த ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

News image
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்த ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Updated On :6 மார்ச் 2026, 8:43 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களாகத் தோ்வு செய்யப்பட்ட இடங்களை

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டுஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை பாதுகாப்பாக வைக்கும் வகையில் இந்திலி மற்றும் பங்காரம் தனியாா் கல்லூரிகளில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த கல்லூரிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் அறைகளில் செய்யப்பட வேண்டிய மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, பொதுப்பணித் துறை செயற் பொறியாளா் மாலா, வட்டாட்சியா் (தோ்தல்) பரந்தாமன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.