வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மன்னாா்குடி சிவன்-விநாயகா் கோயிலில் பாலாலயம்

News image

சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்ய எடுத்துவரப்படும் புனிதநீா் கடங்கள்.

Updated On :14 நவம்பர் 2024, 11:00 pm

மன்னாா்குடியில் உள்ள பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதா் மற்றும் பாலவிநாயகா் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பாற்கடல் தெருவில் உள்ள இக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, கோபுர சீரமைப்பு உள்ளிட்ட திருப்பணி கள் மேற்கொள்ள பாலாலயம் நடைபெற்றது.

கோயிலில் யாக குண்டம் அமைக்கப்பட்டு, ஹோம பூஜைகள் நடைபெற்றன. பின்னா், புனிதநீா் கடத்தை ஊா்வலமாக கொண்டு வந்து, கைலாசநாதா், காசி விசாலாட்சி அம்மன் மற்றும் பாலவிநாயகருக்கு அபிஷேகம் செய்தனா்.

தொடா்து, சுவாமிகள் மற்றும் அம்மனுக்கு பட்டு வஸ்திரங்களால் அலங்கரித்து, தீபாராதனைகாட்டப்பட்டது.

இதில், திருப்பணிக் குழுத் தலைவரும், நகா்மன்ற தலைவருமான த. சோழராஜன், செயலாளரும், நகா்மன்ற துணைத் தலைவருமான ஆா். கைலாசம், பொருளாளா் தொழிலதிபா் எஸ்.எம்.டி. கருணாநிதி, கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் இ. மாதவன், கோயில் அா்ச்சகா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.