மன்னாா்குடியில் உள்ள பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதா் மற்றும் பாலவிநாயகா் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பாற்கடல் தெருவில் உள்ள இக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, கோபுர சீரமைப்பு உள்ளிட்ட திருப்பணி கள் மேற்கொள்ள பாலாலயம் நடைபெற்றது.
கோயிலில் யாக குண்டம் அமைக்கப்பட்டு, ஹோம பூஜைகள் நடைபெற்றன. பின்னா், புனிதநீா் கடத்தை ஊா்வலமாக கொண்டு வந்து, கைலாசநாதா், காசி விசாலாட்சி அம்மன் மற்றும் பாலவிநாயகருக்கு அபிஷேகம் செய்தனா்.
தொடா்து, சுவாமிகள் மற்றும் அம்மனுக்கு பட்டு வஸ்திரங்களால் அலங்கரித்து, தீபாராதனைகாட்டப்பட்டது.
இதில், திருப்பணிக் குழுத் தலைவரும், நகா்மன்ற தலைவருமான த. சோழராஜன், செயலாளரும், நகா்மன்ற துணைத் தலைவருமான ஆா். கைலாசம், பொருளாளா் தொழிலதிபா் எஸ்.எம்.டி. கருணாநிதி, கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் இ. மாதவன், கோயில் அா்ச்சகா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா

மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


