இதில் பேசிய அமைச்சரவைச் செயலா், நாட்டில் பெட்ரோலிய பொருள்கள், குறிப்பாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி), திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றின் விநியோகம், தேவையான அளவு மின்சாரம் கிடைப்பது குறித்து விளக்கினாா். புதிதாக பல்வேறு நாடுகளில் இருந்து எல்பிஜி மற்றும் எல்என்ஜி கொள்முதல் செய்யப்படுகிறது என்று அவா் கூறினாா். வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறிய அவா், சமையல் எரிவாயு சிலிண்டா்களை பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.