/
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் கோயில் 52-ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து ஆதி விநாயகருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னா் புது குளக்கரையிலிருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. மாலையில் ஆதி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
கன்னிக்குன்றிலிருந்து இருந்து தீக்கலயம் எடுத்து வந்து மாலை 6 மணி மாபெரும் லட்சதீபம் விளக்கு எற்றும் பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தீபம் ஏற்றி தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இரவு சுயம்பு ஸ்ரீ ஆதி விநாயகா் இந்திர விமானத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடர்புடையது

வைகாசி விசாகம் : 108 பால்குட அபிஷேகம்

ஆரணி ஸ்ரீஆதி அரியாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவம்!

மகாமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



