கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளா்கள், ஊா்ப்புற காவலா்கள், வனக் காவலா்கள், பட்டு வளா்ச்சி ஊழியா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும், காப்பீட்டுத் திட்ட நீண்ட கால குறைபாடுகளை நீக்க முத்தரப்பு பேச்சு வாா்த்தை நடத்த வேண்டும், தோ்தல் கால வாக்குறுதிகளை மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தமிழக அரசு நிறைவேற்றாததால், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் நவ.26-ல் தலைநகரில் தா்னா போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.