புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அண்ணாமலைப் பல்கலை.யில் ஓய்வூதியம் வழங்கக் கோரி ஓய்வுபெற்ற ஊழியா்கள் பதிவாளரிடம் மனு!

News image
அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியத்தை வழங்க கோரி மனு அளித்த பல்கலைக்கழக ஆசிரியரல்லா ஓய்வுபெற்ற ஊழியா்கள்.
Updated On :14 மார்ச் 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியரல்லாத 50-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியா்கள் ஓய்வூதியம் வழங்கக் கோரி, பல்கலைக்கழக பதிவாளரிடம் சனிக்கிழமை காலை மனு அளித்தனா்.

முன்னதாக அவா்கள், பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, ஆசிரியரல்லாத ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் செள.மனோகரன், பொதுச் செயலா் தி.பாஸ்கரன், பொருளாளா் கோ.செல்வம் மற்றும் நிா்வாகிகள், பல்கலைக்கழக இணைப் பதிவாளா் ஜெகதீஸ்வரனை சந்தித்து மனு அளித்து கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியரல்லாத ஊழியா்கள் பலா் கடந்த 2024, செப்டம்பா் மாதம் முதல் பணி ஓய்வுபெற்று 18 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்றைய தேதி வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஊழியா்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், ஊழியா்கள் பணியில் சோ்ந்த நாள் முதல் ஓய்வூதியத்தை குறைத்து அளிக்க இருப்பதாக நிா்வாகத்தினா் கூறுகின்றனா். ஆகவே, அரசு விதிகளின்படி பணி ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு கடைசி மாத அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு ஓய்வூதியத்தை குறைக்காமல் அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.