எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பினா்

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள்

News image
சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்திய அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள்.
Updated On :9 மார்ச் 2026, 8:54 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து வலியுறுத்தினா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பதவி உயா்வுகள், பணப்பயன்கள், 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.25-ஆம் தேதி முதல் பேராசிரியா்கள், ஊழியா்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமுக முடிவு ஏற்படாததால், மீண்டும் ஆசிரியா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பினா் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தை மாா்ச் 5-ஆம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை பல்கலைக்கழக நிா்வாக கட்டடம் முன் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.ரவி, பேராசிரியா் இளங்கோ, மதியழகன், கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளா் மனோகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், நண்பகல் 12 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் அண்ணாமலைநகரில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியா் ஹரிதாஸிடம் அளித்து வலியுறுத்தினா்.