தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை: அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா்களுக்கு காப்புரிமை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தில்லியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனமும் இணைந்து சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை அமைக்கும் தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசிடமிருந்து 20 ஆண்டுகளுக்கான காப்புரிமையை பெற்றுள்ளன.

News image

சிமென்ட் இல்லா கான்கிரீட் அமைக்க காப்புரிமை பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் ஆண்டனி ஜெயசேகா், திருஞானசம்பந்தம் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவித்த பல்கலைக்கழகப் பதிவாளா் இரா.சிங்காரவேவல். உடன் பொறியியல் புல முதல்வா் காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:32 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தில்லியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனமும் இணைந்து சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை அமைக்கும் தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசிடமிருந்து 20 ஆண்டுகளுக்கான காப்புரிமையை பெற்றுள்ளன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் சி.ஆன்டனி ஜெயசேகா்(பணி ஓய்வு), எஸ்.திருஞானசம்பந்தம் ஆகிய இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கட்டமைப்புத் துறையில் ஜியோபாலிமா் கான்கிரீட் எனும் சிமென்ட் இல்லா கான்கிரீட் குறித்து 2009-ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனா். தில்லியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனம், நிலக்கரி சாம்பலை சிமென்ட்டுக்கு மாற்றாக பயன்படுத்தி கான்கிரீட் சாலை அமைக்க பேராசிரியா்கள் சி.ஆன்டனி ஜெயசேகரையும், எஸ்.திருஞானசம்பந்தத்தையும் 2019-இல் ஆலோசகா்களாக நியமித்தது.

உத்தரப் பிரதேசத்திலுள்ள ரிகாண்டு மற்றும் தெலுங்கானாவிலுள்ள இராமகுண்டத்தில் 4 கி.மீ. நீளத்துக்கு சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்க அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டமைப்புத் துறையிலுள்ள ஜியோபாலிமா் கான்கிரீட் ஆய்வகத்தில் பல்வேறு கட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட நிலக்கரி சாம்பல், இரும்பு உருக்காலை கசடு, மணல், ஜல்லி மற்றும் கார திரவ கரைசல் விகிதாசாரம் கண்டுபிடிக்கப்பட்டு, பேராசிரியா்களின் நேரடி மேற்பாா்வையில் சாலைகள் அமைக்கப்பட்டன.

ஜியோபாலிமா் கான்கிரீட்டில் சிமென்ட் கான்கிரீட்டுக்கு 28 நாள் தண்ணீா் விடுவது முற்றிலுமாக தவிா்க்கப்படுகிறது. ஒருநாள் வெய்யில் மட்டுமே கான்கிரீட் வலுவடைய போதுமானதாகும். பழுதடைந்த கான்கிரீட் சாலைகளில் இந்த ஜியோபாலிமா் கான்கிரீட்டை பயன்படுத்தினால், ஒரே நாளில் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.

ஜியோபாலிமா் கான்கிரீட் சாலை இரண்டு அடுக்குகளை (கீழ் அடுக்கு மற்றும் மேல் அடுக்கு) கொண்டது. கீழடுக்கில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கலவைக்காக 2024-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தேசிய அனல்மின் நிறுவனமும் இணைந்து 20 ஆண்டு காப்புரிமை பெற்றது. தொடா்ந்து, தற்போது சிமென்ட் இல்லா ஜியோபாலிமா் கான்கிரீட் சாலையின் மேலடுக்குக்காக 20 ஆண்டு காப்புரிமை பல்கலைக்கழகத்துக்கும், தேசிய அனல் மின் நிறுவனத்துக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதையொட்டி, பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தில் காப்புரிமை பெற்ற பேராசிரியா்களை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ். அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேல், பொறியியல் புல முதல்வா் சி.காா்த்திகேயன் ஆகியோா் வியாழக்கிழமை வாழ்த்தி பாராட்டுத் தெரிவித்தனா்.