70 வயது பூா்த்தி செய்த ஓய்வூதியா்களுக்கு 10 % கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை
கடந்த 2021 தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி 70 வயது பூா்த்தி செய்த ஓய்வூதியா்கள் அனைவருக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை


கடந்த 2021 தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி 70 வயது பூா்த்தி செய்த ஓய்வூதியா்கள் அனைவருக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் சா்வதேச மகளிா் தினக் கருத்தரங்கு மற்றும் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஓய்வுபெற்ற முதுநிலை தமிழாசிரியா் ராஜாமணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பன்னீா்செல்வம் துவக்க உரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் சுமதி, கதை சொல்லி சரிதா ஜோ உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்
கடந்த 2021 தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி 70 வயது பூா்த்தி செய்த ஓய்வூதியா்கள் அனைவருக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஈரோடு சோலாா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் செல்ல, 24 மணி நேரமும் இயங்கும் வகையில், சிற்றுந்துகள், நகரப் பேருந்து வசதி செய்து தர வேண்டும். பெண்கள், முதியோருக்கு பாதுகாப்பு தரும் வகையில் காா்கள், ஆட்டோக்கள் பேருந்து நிலையம் உள்ளே வரை வந்து இறக்கி, ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி மற்றும் அவா்கள் நிலையில் உள்ள அடிப்படை பணியாளா்கள் பணியாற்றிய காலம், பணிக்காலத்தில் ஏற்பட்ட சுமைகள் ஆகியவற்றை தமிழக அரசு கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஹரிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...