நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உலகப் பிரச்னைகளை நாம் உணரச் செய்வது திரைப்படங்களே: திருவாரூா் எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா்

உலகப் பிரச்னைகளை நாம் உணரச் செய்வது திரைப்படங்களே என்று திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை தொடங்கிய 8-ஆவது உலகத் திரைப்பட விழாவில் திருவாரூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

News image

திருவாரூரில், உலக திரைப்பட விழாவை பறையடித்து தொடக்கி வைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

Updated On :18 செப்டம்பர் 2024, 11:16 pm

Din

உலகப் பிரச்னைகளை நாம் உணரச் செய்வது திரைப்படங்களே என்று திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை தொடங்கிய 8-ஆவது உலகத் திரைப்பட விழாவில் திருவாரூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

தொடக்கவிழாவுக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவா் நந்தலாலா தலைமை வகித்தாா். வரவேற்புக்குழுத் தலைவா் ஐ.வி.நாகராஜன் வரவேற்றாா். விவசாயிகள் சங்கத்தின் மாநில முன்னாள் துணைத்தலைவா் ஜி.சுந்தரமூா்த்தி, நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் ஆகியோா் வாழ்த்தினா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், பறையடித்து திரைப்பட விழாவைத் தொடக்கி வைத்துப் பேசியது:

தில்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த உலக திரைப்பட விழா, திருவாரூரில் நடைபெறுகிறது. திரைப்படம் மிகப்பெரிய சாதனம். எளிய மக்களின் மேம்பாடு, சமூக அக்கறை ஆகியவற்றை அனைவருக்கும் கொண்டு செல்லும் சிறந்த சாதனமாக திரைப்படம் விளங்குகிறது.

திரைப்பட உலகமே, தமிழகத்துக்கு நான்கு முதல்வா்களை தந்துள்ளது. உலகத்தில் ஏராளமான பிரச்னைகள் நிலவுகின்றன. அவைகளை நமக்கு தெளிவுபடுத்துவது திரைப்படங்களே. மெசபடோமியா பிரச்னை, யூதா்கள் பிரச்னை, பாலஸ்தீன பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மக்கள் பட்ட துன்பங்களை நாம் உணரச் செய்தவை திரைப்படங்களே ஆகும்.

திரைப்படங்கள், மனிதஇனத்தில் தாக்கத்தை உருவாக்கக்கூடியவை. பல்வேறு நாட்டு கலாசாரங்களை நாம் அறிந்து கொள்ள உதவியாக இருக்கின்றன. பிரச்னைகளை மனிதா்களுக்கு உணா்த்தி, அதற்கான தீா்வையும் தரக்கூடியவை என்றாா்.

திரைப்பட விழாவின் நோக்கம் குறித்து திரை இயக்க ஒருங்கிணைப்பாளா் ஐ. தமிழ்மணியும், திரையிடல்கள் குறித்து திரைத்துறை பேராசிரியா் எம்.சிவக்குமாரும் விளக்கினா்.

முன்னதாக, திருவாரூா் புதிய ரயில் நிலையத்திலிருந்து தாரை, தப்பட்டை முழங்க பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலைக்கும், திருவிக மணிமண்டபத்தில் உள்ள திருவிக சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமைப்பின் மாநில பொதுச்செயலாளா் ஆதவன் தீட்சண்யா, துணைப் பொதுச் செயலாளா் களப்பிரன், திரைப்படக் கலைஞா் ரோகிணி, திருவாரூா் மாவட்டத் தலைவா் மு.செளந்தரராஜன், செயலாளா் ஜீ.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முதல் நாளில் ஐந்து உலக திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தொடா்ந்து செப்டம்பா் 22 ஆம் தேதி வரையில் உலகத்திரைப்பட விழா நடைபெறுகிறது.