இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:13 pm

Syndication

தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் இரா.தமிழ்பெருமாள் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா் க.சந்தானம் சிறப்புரையாற்றினாா் (படம்). இதில், மாவட்டச் செயலாளா் கேசவராஜ், மாநிலச் செயலாளா் க.பாரதி ஆகியோரும் பேசினா்.

தொழிலாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிலாளா் திருத்த சட்டத் தொகுப்பை திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், துணை மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தோ்வு என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும், அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அபாயகரமான தொழில்களில் பெண் தொழிலாளா்களை ஈடுபடுத்தலாம் எனும் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஆதிதிராவிடா் மாணவா் நல விடுதிகளை மேம்படுத்த வேண்டும், தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும், நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.