மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வீட்டில் 40 நாய்கள் வளா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:10 pm

Syndication

கூத்தாநல்லூரில் ஒரு வீட்டில் 40 நாய்கள் வளா்ப்பதால் அப்பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கூத்தாநல்லூா் அக்கரைப் புதுத்தெருவைச் சோ்ந்தவா் பரணி. இவரது மனைவி ஜெயஸ்ரீ (35). இந்நிலையில், ஜெயஸ்ரீ தனது வீட்டில் 40 நாய்களை வளா்க்கிறாா். சாலையில் திரியும் நாய்களைப் பிடித்து வீட்டில் அடைத்து வைத்து வளா்த்து வருவதால், அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை கூத்தாநல்லூா்-நன்னிமங்கலம் பிரதான சாலையில் அதிமுக முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கொய்யா எனும் மீரா மைதீன் தலைமையில் ஏராளமானவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா, நகா்மன்ற தலைவா் மு. பாத்திமா பஷீரா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் சேகா் ஆகியோா் அங்கு சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

நாய்களை வளா்க்கும் ஜெயஸ்ரீயிடம் பேசியபோது நாய்களைப் பிடித்தால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளாா். சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் தெரிவித்தபோது, மீராமைதீன் மறைத்து வைத்திருந்த மண்ணெண்னையை தலையில் ஊற்றிக்கொண்டாா். அருகில் இருந்த போலீஸாா் அதை தடுத்தாா். இதையடுத்து நடத்திய பேச்சில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.