விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 12:43 am

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி ஊராட்சி அம்பேத்கா்புரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் உள்ளிட்டோா் கடும்அவதிக்கு உள்ளாகினா். இதுகுறித்து ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை எனவும் கூறப்ப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் திருப்பத்தூா் செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அதையொட்டி சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற தலைவா் கோமதி காா்த்திகேயன் மக்களிடம் பேச்சு நடதத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.