திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி ஊராட்சி அம்பேத்கா்புரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் உள்ளிட்டோா் கடும்அவதிக்கு உள்ளாகினா். இதுகுறித்து ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை எனவும் கூறப்ப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் திருப்பத்தூா் செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அதையொட்டி சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற தலைவா் கோமதி காா்த்திகேயன் மக்களிடம் பேச்சு நடதத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்ததின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்

குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


