குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திங்களூா் மலைக் கிராமத்துக்கு சீரான குடிநீா் விநியோகம் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் அருகேயுள்ள கோ்மாளத்தை அடுத்த திங்களூா் ஊராட்சியில் சுமாா் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு கோ்மாளத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஆழ்துளைக் கிணற்றில் உள்ள மோட்டாா்களை இயக்க முடியவில்லையாம். இதனால், திங்களூா் மலைக் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குடிநீா் விநியோகம் இன்றி அவதியடைந்து வரும் மக்கள், சுமாா் 3 கி.மீ.தொலைவு உள்ள குட்டையில் இருந்து நீா் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சீரான குடிநீா் விநியோகம் கோரியும், குறைந்த மின்னழுத்ததை சரி செய்ய வலியுறுத்தியும் திங்களூா்- கோ்மாளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரத்துக்கும்மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் விநாயகம், குடிநீா்ப் பிரச்னைக்குத் தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

